நலம் பல தரும் ஆப்பிள்

>> Saturday, July 18, 2009

மனிதனுக்கு தேவையான ஹீமோகுளோபின் அதிகம் நிறைந்த பழம் ஆப்பிள், உதிரப் போக்கை நிறுத்தவும், இரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி பெற்றது. தொடர்ந்து உண்டால் உடலில் மினுமினுப்பும் கவர்ச்சியும் வந்தடையும்.
தினமும் ஆப்பிளை மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவடையுமட. ஈறுகளில் புண்கள், வலி, இரத்தம் வருதல் போன்றவற்றை ஆப்பிள் தடை செய்யும். கல்லீலரைச் சுறுசுறுப்பாக்கும் ஆற்றலும் குடற்கிருமிகளைக் கொல்லும் சக்தியும் இதற்குண்டு. குழந்தைகளுக்கு ஆப்பிள் தரலாம். இது நல்ல மலமிளக்கி. பேதியாகும் குழந்தைகளுக்கு வேக வைத்து பிசைந்து கொடுக்கலாம்.

ஆப்பிளில் உள்ள பாஸ்பரஸ் சத்து மூளைக்கு வலிமையும், தெளிவும் தரும். மூளைக்கோளாறு உள்ளவர்களுக்கு இது மாமருந்து, வாத நோய்க்கும் அருமருந்து. நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை போன்ற வற்றை தினம் ஒரு பழம் சாப்பிட்டால் குணம் தெரியும்.

0 comments:

Followers