உடல் இளைக்க/பருக்க ஒரே மருந்து எள்

>> Wednesday, July 29, 2009

  • படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெள்ளைமுள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால் விரைவில் குணம் தெரியும்.
  • காலை உணவிற்கு 3 மணி நேரத்திற்கு முன் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள் உடல் குண்டாக இருப்பவர்கள் இளைக்கவும் ஒல்லியானவர்கள் பருக்கவும் வைக்கும்.
  • 5 கிராம் எள் விழுதுடன் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் மூல நோய் குணமடையும்.
  • ரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் பாதியாக பொடித்த எள்ளுடன் தேனையும் நெய்யும் கலந்து தடவ விரைவில் குணமடையும்.
  • நீரிழிவு நோய் கண்டவர்கள் 5 கிராம் எள்ளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் கருநிற தோள் கழன்று வெந்நிறமாகும். இதை நன்கு காய வைத்து வாணலியில் வறுக்கவும். பின் பனை வெல்லத்தைப் பாகு செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை ஒருண்டை வீதம் உண்டு வெந்நீர் பருகுக. 21 நாள் செயக. நீரிழிவு குறையும். இனிப்பை இநநேரம் தவிர்க்க வேண்டும். தினமும் காகற்காய் உணவில் சேர்க்கலாம்.

Read more...

மூளையைச் சுறுசுறுப்பாக்கும் இலந்தம்பழம்

>> Monday, July 27, 2009

இலந்தம்பழம் ”Glutomic” அமிலம் உள்ளது. இது மூளையைச் சுறுசுறுப்பாக்கும். வைட்டமின் ஏ உயிர்ச்சத்து இலந்தைம்பழத்தில் ஏராளமாக உள்ளது. சுண்ணாம்புச் சத்தும் நிறையவே இருக்கிறது. எனவே எலும்பு, பற்கள் உறுதி பெற அடிக்கடி இலந்தைப்பழத்தை சாப்பிடலாம். வயிற்றுப்போக்கு, சீதபேதி, கீழ்வாயுப்பிடிப்பு, நீரிழிவு, மலச்சிக்கல், முதலியவற்றிற்கு இப்பழம் நல்ல மருந்து என நம் மருத்துவ நூல்கள் கூறுகிறது.
தொண்டைப்புண், ஈறுகளில் இரத்தப்பெருக்கு, வாய்ப்புண் இவற்றிற்கு இலந்தை இளந்தளிர்களை நீரில் போட்டு, உப்பைச் சேர்த்துக் கொதிக்க வைத்துக் கொப்பளித்தால் பலன் தெரியும்.
இதனுடைய பைனாமியல் நேம் Ziziphus Jujuba
விக்கிபீடியா தொடுப்பு : http://en.wikipedia.org/wiki/Jujube

Read more...

மலிவான மருந்து கொய்யா

>> Friday, July 24, 2009

விலைமலிவான பழங்களிலும் நிறைய சத்தும் மருத்துவ குணங்களும் உண்டு எனபதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு கோய்யா. இது நம் நாட்டில் மிக அதிகமாகப் பயிராவதால்தான் இதன் விலை மலிவு

  • விதை நீக்கப்பட்ட கொய்யாப்பழம் இதயத்துக்கு வலுவூட்டும் சக்தியுடையது.
  • மலச்சிக்கலை நீக்கும்.விக்கல் நிற்கும்
  • கொய்யாப் பிஞ்சு பேதியை நிறுத்தும்.
  • கொய்யா இலை கஷாயம் வாந்தியும் பேதியையும் நிறுத்தும்.
  • கொய்யா இலையை நன்றாக மென்று வாய் கொப்பளித்தால் பல்வலி குறையும்.
  • கொய்யா இலைக் கொழுந்தை உண்டால் நல்ல பசி எடுக்கும்.குடல் வலுப்பொறும்.
  • அஜீரணத் தொல்லைகளுக்கு இலைக் கொழுந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் குணம் அடையும்.
  • கொய்யாவின் தோலை நீக்கி உண்ணக்கூடாது.

Read more...

அணுகுண்டு கதிரியக்கத்தை எதிர்க்க எலுமிச்சை

குறைந்த விலையில் நிறைந்த பயனைத் தரக்கூடிய பழவகைகளில் ஈடு இணையற்றது எலுமிச்சை, இதன் மருத்துவப் பலன்கள். பித்தத்தைப் போக்கும், தலைவலி தீர்க்கும், மலச்சிக்கல் விலக்கும், தொண்டை வலியைப் போக்கும், வாந்தியை நிறுத்தும், காலராக் கிருமிகளை ஒழிக்கும், பல் நோய் போக்கும், வாய் நாற்றம் போகும், சர்ம நோய்கள் விலகும், டான்சிலைத் தடுக்கும், விஷத்தை முறிக்கும், வாய்ப்புண் ஆற்றும், தேள் கடிக்கு உதவும், மஞ்சல் காமாலையை நீக்கும், வீக்கத்தை குறைக்கும் வாயுவை அகற்றும் பசியை உண்டாக்கும் விரல் சுற்றிக்கு உதவும், யானைக்கால் வியாதியைக் குணப்படுத்தும்.

அணுகுண்டு சோதனைகள் நடத்துவால் நீதிலும், காற்றிலும் ஏற்படும் கதிரியக்க அபாயத்தைத் தடுக்கும் ஆற்றல் எலுமிச்சை தோலில் உள்ள “புளோபிளேன்“ என்ற சத்தில் உள்ளது. தினமும் எலுமிச்சை உண்பவர்கள் கதிரியக்கத்தைத் தாங்கி தப்ப முடியும். புற்று நோய்க்காரர்களுக்கு எக்ஸ்ரே சிகிச்சையால் ஏற்படும் கதிரியக்கத்தீங்கையும் எலுமிச்சை தடுக்கிறது

Read more...

இஞ்சி மருத்துவம் - 2

கர்ப்பிணிகளின் விக்கல் நிற்க.
2 தேக்கரண்டி இஞ்சிச்சாறுடன் புளியங்கொட்டை அளவு திப்பிலியும் அதே அளவு கடுக்காயும் சேர்த்து மை போல் அரைத்து உள்ளுக்குத் தருக நிற்காத விக்கல் நிற்கும்.

விடாத தலைவலிக்கு
இஞ்சியைத் தட்டி வலியுள்ள இடத்தில் கனமாகப் பற்றுப் போடுக. கால் மணி நேரத்தில் தலைவலி பறந்துபோகும்.

காச நோய் தீர
சுண்டு விரல் நீள இஞ்சி அதே அளவு சிறறரத்தை இவற்றைச் சேர்த்து அம்மியில் நசுக்கி, ஒரு டம்ளரை் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கஷாயத்துடன் சர்க்கரை சேர்த்து குடிக்கக் காசநோய் காணாமல் போகும்.

Read more...

காய்ச்சல் நீங்க இஞ்சி மருத்துவம்

>> Monday, July 20, 2009

பாதி சுண்டுவிரல் இஞ்சியுடன் ஒரு கைப்பிடியளவு புதினாக் கீரையைச் சேர்த்து சாறெடுத்து, வடிகட்டி, தேக்கரண்டி தேனைக் குழப்பிக் கலந்து உண்டு சிறிது வெந்நீர் பருகவேண்டும் இப்படி ஒரு நாளைக்கு ஆறு வேளை தயாரித்து உண்டால் பின் விளைவில்லாமல் எந்தக் காய்ச்சலையும் குணப்படுத்தலாம்.

Read more...

உடலை பொன்னிறமாக மாற்றும் ஆவாரம்பூ

ஆவராரம்பூவை உணவில் அடிக்கடி சேர்த்துச் சமைத்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும். சிலரது தோலில் உப்பு பூத்தாற்போல் வரண்டு இருக்கும் வியர்வையில் துர்வாடை வீசும் அடிக்கடி நாக்கு வறன்டுவிடும் இதை அனைத்தையும் போக்க சிறந்த மருந்து ஆவராம்பூ.

ஆவாரம்பூவைக்கொண்டு செய்யப்படும் சர்பத்தால் ஆண், பெண் மர்ம உறுப்புகளில் ஏற்படும் எரிச்சல் குணமடையும். உறக்கத்தில் விந்து வெளிப்படுதல் மற்றும் உடல் நமைச்சல் அடங்க ஆவாரம்பூ சர்பத் மிகவும் உகந்தது.


கண்நோய் உள்ளவர்கள் இதை வதக்கி இரவில் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் விரைவில் குணமடையும்.


ஆவாரம்பூ குறித்த தமிழ்வாணன் அவர்களின் பதிவு

Read more...

நலம் பல தரும் ஆப்பிள்

>> Saturday, July 18, 2009

மனிதனுக்கு தேவையான ஹீமோகுளோபின் அதிகம் நிறைந்த பழம் ஆப்பிள், உதிரப் போக்கை நிறுத்தவும், இரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி பெற்றது. தொடர்ந்து உண்டால் உடலில் மினுமினுப்பும் கவர்ச்சியும் வந்தடையும்.
தினமும் ஆப்பிளை மென்று சாப்பிட்டு வந்தால் பற்கள் வலுவடையுமட. ஈறுகளில் புண்கள், வலி, இரத்தம் வருதல் போன்றவற்றை ஆப்பிள் தடை செய்யும். கல்லீலரைச் சுறுசுறுப்பாக்கும் ஆற்றலும் குடற்கிருமிகளைக் கொல்லும் சக்தியும் இதற்குண்டு. குழந்தைகளுக்கு ஆப்பிள் தரலாம். இது நல்ல மலமிளக்கி. பேதியாகும் குழந்தைகளுக்கு வேக வைத்து பிசைந்து கொடுக்கலாம்.

ஆப்பிளில் உள்ள பாஸ்பரஸ் சத்து மூளைக்கு வலிமையும், தெளிவும் தரும். மூளைக்கோளாறு உள்ளவர்களுக்கு இது மாமருந்து, வாத நோய்க்கும் அருமருந்து. நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை போன்ற வற்றை தினம் ஒரு பழம் சாப்பிட்டால் குணம் தெரியும்.

Read more...

சீரண உறுப்புகளை வலுப்படுத்தும் அன்னாசி




மஞ்சல் காமாலையை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் அன்னாசி சாறுக்கு உண்டு. இரத்தமிழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி மிகசிறந்த மருந்து. பித்த சம்பந்தமான கோளாறுகள் காரணமாக காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் போன்றவற்றை நீக்குவதில் அன்னாசி சூரன். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாக அன்னாசி உதவும். ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி கண், காது, பல், தொண்டை சம்பந்தமான அனைத்து நோய்களையும். வாய்ப்புண், மூலைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை தேனும் அன்னாசிப்ழமும் சேர்த்து செய்யப்படும் அன்னாசிப்பழ சர்பத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைவில் குணம் தெரியும்.


அன்னாசிப்பழம் அதிக சூடு, சீதபேதி, வயிற்றுவலி ஏற்படுத்தும் எனபது மூட நம்பிக்கை, மாம்பழம், ஆரஞ்சு பழங்களில் உள்ள அதே 14 கலோரி தான் அன்னாசியிலும் உள்ளது இது நாம் தினமும் பயன்படுத்தும் புலியின் அளவான 82 கலோரியைவிட மிகக்குறைவு. இரத்தத்தைச் சுத்தி செய்வது, சீரண உறுப்புகளை வலுப்படுத்துவது, மலக்குடலைச் சுத்தப்படுத்துவது அன்னாசியின் சிறப்பு.

Read more...

மருத்துவ குணம் நிறைந்த அவரை

>> Friday, July 17, 2009



கொடிகளில் விளையும் காய்களில் மிகச்சிறந்தது அவரைக்காய். மலிவான விலையில் நிறைய ஊட்டச்சத்தினைத் தருவதும் அவரை தான். இது புரதம், சுண்ணாம்புச்சத்து, இரும்பு, மற்றும் பல வைட்டமின் சத்துக்கள் ஒருங்கே பெற்ற சிறந்த காய்வகை. மிக எளிதாக செரித்துவிடக்கூடியது பலவீனமான குடல் உடையவர்களுக்கு இரவு நேரத்திலும் பத்திய உணவாகவும் உண்ண ஏற்றது.


முற்றிய அவரைக் காயை விட அவரைப்பிஞ்சே உடலுக்கு நல்லது. வெண்ணிற அவரைக்காய் வாயு, பித்தம் இவற்றைக் கண்டிக்கும். உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்கும்; எரிச்சலை அடக்கும். நீரிழிவு நோய், பேதித்தொல்லை, அடிக்கடி தலை சுற்றல் வருதல், ஜீரணக் கோளாறு சீதபேதி இவற்றிற்கு அவரையை அடிக்கடி உணவில் சேர்த்தால் விரைவில் பலனுண்டு.



அஸ்ஸாமில் காது வலிக்கும், தொண்டை வலிக்கும் மருந்தாக அவரைக்காயின் சாறைப் பயன்படுத்துகின்றனர்.அண்மைய கண்டுபிடிப்புகளில் அவரைக்கு இரத்தக் கொதிப்பை தடுக்கும் ஆற்றல் உண்டு என கண்டறந்துள்ளர்.


Read more...

Followers