மருத்துவ குணம் நிறைந்த அவரை

>> Friday, July 17, 2009



கொடிகளில் விளையும் காய்களில் மிகச்சிறந்தது அவரைக்காய். மலிவான விலையில் நிறைய ஊட்டச்சத்தினைத் தருவதும் அவரை தான். இது புரதம், சுண்ணாம்புச்சத்து, இரும்பு, மற்றும் பல வைட்டமின் சத்துக்கள் ஒருங்கே பெற்ற சிறந்த காய்வகை. மிக எளிதாக செரித்துவிடக்கூடியது பலவீனமான குடல் உடையவர்களுக்கு இரவு நேரத்திலும் பத்திய உணவாகவும் உண்ண ஏற்றது.


முற்றிய அவரைக் காயை விட அவரைப்பிஞ்சே உடலுக்கு நல்லது. வெண்ணிற அவரைக்காய் வாயு, பித்தம் இவற்றைக் கண்டிக்கும். உள்ளுறுப்புகளின் அழற்சியைப் போக்கும்; எரிச்சலை அடக்கும். நீரிழிவு நோய், பேதித்தொல்லை, அடிக்கடி தலை சுற்றல் வருதல், ஜீரணக் கோளாறு சீதபேதி இவற்றிற்கு அவரையை அடிக்கடி உணவில் சேர்த்தால் விரைவில் பலனுண்டு.



அஸ்ஸாமில் காது வலிக்கும், தொண்டை வலிக்கும் மருந்தாக அவரைக்காயின் சாறைப் பயன்படுத்துகின்றனர்.அண்மைய கண்டுபிடிப்புகளில் அவரைக்கு இரத்தக் கொதிப்பை தடுக்கும் ஆற்றல் உண்டு என கண்டறந்துள்ளர்.


0 comments:

Followers